உரோம் இத்தாலியின் தலைநகரம் ஆகும். உலகில் அழகு என்ற சொல்லுக்கு உரோம் நகரையும் கூறலாம். ஏனென்றால் ரோமர்கள் அப்படி அந்நகரை வடித்திருப்பர். 'எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே', 'இறப்பதற்கு முன் ரோமை பார்க்க வேண்டும்' என்னும் வாக்கியங்கள் அதன் சிறப்புக்கு உதாரணம் ஆகும். ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ரோம் கலாச்சாரமே வழிகாட்டி ஆகும். இதுவே இத்தாலியின் மக்கள்தொகை மிக்க நகரமும் ஆகும். 1,285.3 km² பரப்பளவுள்ள இந்நகரில் சுமார் 2.8 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இதனால் இந்நகரமே நாட்டின் மிகவும் மக்களடர்த்தி மிக்க நகரமாக விளங்குகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் நான்காவது மிகுந்த மக்கள்தொகை கொண்ட பெருநகரப்பகுதியாக விளங்குகின்றது. பெருநகரப்பகுதியில் மக்கள்தொகை 3.8 மில்லியனாக உள்ளது.